For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிட்டராவதே என் விருப்பம் - +2 "டாப்பர்" பவித்ராவின் கனவு!

Google Oneindia Tamil News

கோவை: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி பவித்ரா சி.ஏ படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் பவித்ரா என்ற மாணவி 1200 க்கு 1192 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

அதே போன்று நிவேதா என்ற மாணவியும் 1192 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார்.

ஆடிட்டராக விருப்பம்:

ஆடிட்டராக விருப்பம்:

தன்னுடைய வெற்றி குறித்து பவித்ரா, "நான் ஆடிட்டராக வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கவுண்டன்சி குரூப்பை தேர்வு செய்துபடித்தேன்.

10ம் வகுப்புக் கனவு இது:

10ம் வகுப்புக் கனவு இது:

மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றதன் மூலம் அதற்கான வாய்ப்பு கனிந்திருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவியாக வருவேன் என்று எதிர்பார்த்தேன். எனது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

எதிர்ப்பார்ப்பில்லா வெற்றி:

எதிர்ப்பார்ப்பில்லா வெற்றி:

ஆனால் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். எனவே பிளஸ் 2 தேர்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்தேன்.

சி.ஏவில் சாதனை படைப்பேன்:

சி.ஏவில் சாதனை படைப்பேன்:

ஆனால் இப்போது நான் எதிர்பாராதது நடந்திருக்கிறது. கண்டிப்பாக சி.ஏ. படித்து சாதனை படைப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
HSC examination 2015 topper girl Pavitra’s wants to be an auditor. She selected CA for her higher studies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X