சபலம்... தங்க செயினை திருநங்கைகளிடம் இழந்த வாலிபர்
கோவை: கோவையில் வாலிபரை விபசாரத்துக்கு அழைத்துச்சென்று நகைபறித்த திருநங்கைகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 ½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் போடியை சேர்ந்த பாண்டியன். இவர் தனது தங்கைக்கு தேவையான புத்தகங்கள் வாங்க கோவை வந்துள்ளார். பின்னர் அவர் கடந்த 3 ஆம் தேதி இரவில் கோவை வ.உ.சி. பூங்கா அருகே நடந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு காரில் வந்த நபர் ஒருவர் அந்த வாலிபரிடம் தன்னிடம் 2 அழகிகள் இருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறி உள்ளார்.
சபலத்தால் வந்த வினை:
அதில் சபலமடைந்த வாலிபர் காரில் ஏறி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ஒரு மறைவான இடத்தில் கார் நின்றது. அங்கு 2 பேர் நின்றிருந்தனர். அருகே சென்றபோது அவர்கள் திருநங்கைகள் என்பது தெரியவந்தது.
நகை பறிப்பு:
இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் அங்கிருந்து தப்ப முயன்றார். உடனே அந்த திருநங்கைகள் அந்த வாலிபரை பிடித்து அவருடைய கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துவிட்டு காரில் தப்பிச்சென்றனர்.
டிரைவர் கைது:
இந்த நூதன நகை கொள்ளை குறித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரகுபதி என்பவரை கைது செய்தனர்.
திருநங்கைகளும் கைது:
தப்பி ஓடிய திருநங்கைகள் 2 பேரையும் தேடி வந்தனர்.இந்நிலையில் காந்திபுரம் பஸ்நிலைய பகுதியில் சுற்றிதிரிந்த அவர்கள் 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மும்தாஜ் மற்றும் இளவஞ்சி ஆகிய 2 திருநங்கைகளும் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்.
நகை மீட்பு:
இவர்களிடம் இருந்து 3½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் இருவரும் போலீஸ் விசாரணைக்காக ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீஸ்நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தனர்.
தகாத வார்த்தைகள்:
அப்போது, திருநங்கைகள் 2 பேரும் கேவலமாக நடந்துகொண்டதுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்தவர்களை தகாதவார்த்தைகளால் திட்டினர். கைதான 2 பேரும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிந்திப்பீர்களா? :
சமூகத்தில் கவுரமாக வாழ நினைக்கும் பல திருநங்கைகள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படிப்பட்ட சிலரால்தான் அவர்களுடைய உரிமை இன்னும் அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.
-
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications