அண்ணா பல்கலைக்கழகத்தில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விஷவாயு தாக்கியதில் இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காற்று மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொட்டிக்கு பெயின்ட் அடிக்கும் பணியில் அயப்பக்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ரமேஷ் சங்கர், தீபன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியது. இதில் பணியில் இருந்த தொழிலாளர்கள் இருவரும் நிலைகுலைந்தனர். தொடர்ந்து, மருத்துவ சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தொழிலாளர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications