டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி – மயிலாடுதுறை மக்கள் பீதி!
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இரண்டு வயதான குழந்தை ஒன்று டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆனந்த தாண்டவபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன், விவசாயி. இவரது மகள் திவ்யதர்ஷினி. இவளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது.

பின்னர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுமி இறந்தாள். இது குறித்த தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை பிரிவில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.
காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு தனியாரிடம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொண்டு முறையான சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications