சென்னையில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 20,000 பேர் மீட்பு
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களில் 20 ஆயிரம் பேர் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.
வரலாறு காணாத மழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துவிட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்க இடம் அறிவிக்கப்பட்டாலும் அவர்களால் அங்கு செல்ல முடியாத அளவுக்கு சாலை எல்லாம் வெள்ளமாக உள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில அரசின் மீட்பு குழு சேர்ந்து மீட்டு வருகின்றன. அவர்கள் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேரை மீட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர கமிஷனர் விக்ரம் கபூர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications