Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மது போதையில் பரீட்சை எழுத வந்த பிளஸ் ஒன் மாணவர்கள் 20 பேர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் தேர்வு எழுத போதையில் வந்த பள்ளி மாணவர்கள் 20 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கழுகுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1200 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக ஜிந்தா மாதா பக்கீர் இருந்து வருகிறார். இப்பள்ளியில் காலாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன.

காலையில் பன்னிரெண்டாம் வகுப்புக்கும், மதியம் பதினொன்றாம் வகுப்புக்கும் தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது அறையில் மது வாடை அடித்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் விசாரணையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்வு எழுத மது குடித்து விட்டு முழு போதையில் வந்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது அவர் தேர்வு எழுதியபடியே பெஞ்சில் தலை வைத்து படுத்தார்.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்க்கு தகவல் தெரிவித்தார். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பள்ளிக்கு வந்து மாணவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மது குடித்ததை ஓப்பு கொண்டார். தாசில்தார் ரமேஷ் விஏஓ மாரிச்சாமி ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து மாணவரின் பெற்றோரை அழைத்து வர சொல்லி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்த மாணவரை அக்டோபர் 30ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே இந்த பளளியில் மது அருந்தி விட்டு வந்த மாணவர் ஒருவர் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தொடக்க கல்வி அலுவலர் இன்று நேரடியாக வந்து விசாரணை நடத்துகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+