சிறார் காப்பகத்திலிருந்து 32 பேர் ஓட்டம்.. 14 பேர் கைது.. கழுத்தறுத்து 4 பேர் தற்கொலை முயற்சி
சென்னை: சென்னையிலுள்ள கெல்லீஸ் கூர் நோக்கு பள்ளியில் சிறார்களுக்கு நடுவே ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி 32 இளம் குற்றவாளிகள் சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு எழும்பூர் மேஜிஸ்திரேட் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தப்பியோடியவர்களில் 14 பேர் பிடிபட்டனர்.

சென்னை, கெல்லீஸ் பகுதியில் அரசு கூர்நோக்கு பள்ளி செயல்பட்டு வருகிறது. சிறு வயதில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார் குற்றவாளிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பள்ளியில், மொத்தம் 53 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறுவர்கள் நடுவே திடீரென இன்று காலை உணவு வேளையின்போது, பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை பயன்படுத்தி கூர் நோக்கு இல்லத்தில் இருந்து சுமார், 32 சிறுவர்கள் சுவரை ஏறி குதித்து வெளியே தப்பியோடியுள்ளனர்.

சிறார் குற்றவாளிகளை பிடிக்க சென்னை நகரில் போலீசார் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர். விவரம் கேள்விப்பட்டு, குற்றவாளிகளின் பெற்றோர் சிலர் கூர் நோக்கு இல்லத்தை முற்றுகையிட்டு தங்கள் பிள்ளைகள் உள்ளே பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை அறிவதற்காக காத்திருந்தனர். உரிய பதில் வராததால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் நடத்தினர்.
போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்ட நிலையில், எழும்பூர் மேஜிஸ்திரேட் லட்சுமி இன்று மதியம், சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு நடத்தினார்.
இதனிடையே தப்பியோடிய சிறுவர்களில் 14 பேர் இன்று மதியம் போலீசாரிடம் பிடிபட்டனர். அதில், 3 சிறுவர்கள் போலீசாரை பார்த்ததும், டியூப் லைட்டை உடைத்து கழுத்தையும், கைகளையும் அறுத்துள்ளனர். இருப்பினும் உயிருக்கு ஆபத்தில்லை. மருதத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். எஞ்சிய சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications