தூத்துக்குடி தன்னெழுச்சி போராட்டத்தில் சிக்கி காவலர்களும் காயம்!
கலவரத்தில் பாதுகாப்பு போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மக்களின் உணர்வு போராட்டத்துக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதுடன், ஏராளமான காவலர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறைக்கு முதல்காரணமே போலீசாரின் தடியடி நடவடிக்கைதான். மேல்மட்ட தரப்பின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட ஏராளமான போலீசார், போராட்டக்காரர்களை அடுத்தக்கட்டமாக கண்ணீர்புகையை வீசி கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறிய நிலையில், ஒருகட்டத்தில் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் ஆத்திரமடைந்து, அடித்து நொறுக்குதல், தீ வைத்து எரித்தல் போன்றவற்றில் ஈடுபட, வன்முறை களம் முழுதும் ரத்தக்களமானது.
இதனால் கடைசியாக துப்பாக்கி சூடு என்ற ஆயுதத்தை போலீசார் கையிலெடுத்தனர். இதனால் தூத்துக்குடி முழுவதும் போர்க்களமாக காட்சியளிக்க தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற துப்பாக்கி சூடு தமிழகத்தில் நடைபெற்றதில்லை. தற்போது நடைபெற்ற இந்த துப்பாக்கி சூட்டிற்கு 2 பெண்கள் உட்பட 10 பேர் இறந்திருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.
மேலும் போராட்டக்காரர்கள் மீண்டும் கூடலாம் என்பதாலேயும், வன்முறையை கட்டுப்படுத்தவும் போலீஸார் மீண்டும் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதுடன், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தடையை மீறி வந்த போராட்டக்கார்களை தடுத்து நிறுத்தும்போதும், தடியடி நடத்தும்போது பதில் தாக்குதலிலும், ஏராளமான போலீசாரும் படுகாயமடைந்தனர். கல்வீச்சில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் மண்டை உடைந்து ரத்தம் வழிய தொடங்கியது. அவர்களும் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications