தூத்துக்குடி தன்னெழுச்சி போராட்டத்தில் சிக்கி காவலர்களும் காயம்!
கலவரத்தில் பாதுகாப்பு போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மக்களின் உணர்வு போராட்டத்துக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதுடன், ஏராளமான காவலர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறைக்கு முதல்காரணமே போலீசாரின் தடியடி நடவடிக்கைதான். மேல்மட்ட தரப்பின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட ஏராளமான போலீசார், போராட்டக்காரர்களை அடுத்தக்கட்டமாக கண்ணீர்புகையை வீசி கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறிய நிலையில், ஒருகட்டத்தில் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் ஆத்திரமடைந்து, அடித்து நொறுக்குதல், தீ வைத்து எரித்தல் போன்றவற்றில் ஈடுபட, வன்முறை களம் முழுதும் ரத்தக்களமானது.
இதனால் கடைசியாக துப்பாக்கி சூடு என்ற ஆயுதத்தை போலீசார் கையிலெடுத்தனர். இதனால் தூத்துக்குடி முழுவதும் போர்க்களமாக காட்சியளிக்க தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற துப்பாக்கி சூடு தமிழகத்தில் நடைபெற்றதில்லை. தற்போது நடைபெற்ற இந்த துப்பாக்கி சூட்டிற்கு 2 பெண்கள் உட்பட 10 பேர் இறந்திருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.
மேலும் போராட்டக்காரர்கள் மீண்டும் கூடலாம் என்பதாலேயும், வன்முறையை கட்டுப்படுத்தவும் போலீஸார் மீண்டும் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதுடன், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தடையை மீறி வந்த போராட்டக்கார்களை தடுத்து நிறுத்தும்போதும், தடியடி நடத்தும்போது பதில் தாக்குதலிலும், ஏராளமான போலீசாரும் படுகாயமடைந்தனர். கல்வீச்சில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் மண்டை உடைந்து ரத்தம் வழிய தொடங்கியது. அவர்களும் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications