20 தமிழர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே இன்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த 20 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் சிறை பிடித்துக் கொண்டு போயுள்ளனர்.
அவர்களின் ஐந்து படகுகளையும் சிங்களர்கள் பிடித்துக் கொண்டு போயுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மீனவர்கள்.
இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் பெலோமின் தியாகராஜன் கூறுகையில், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு படகு, ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த நான்கு படகுகளையும், அதில் இருந்த 20 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று விட்டதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications