கிருஷ்ணகிரியை சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட 21 பேர் குலு மணாலியில் சிக்கி தவிப்பு.. உணவின்றி தவிப்பு
கிருஷ்ணகிரியை சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட பள்ளி ஊழியர்கள் 21 பேர் குலு மணாலியில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.
Recommended Video

ஓசூர்: கிருஷ்ணகிரியை சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட பள்ளி ஊழியர்கள் 21 பேர் குலு மணாலியில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வெங்கடேஷ் நகர் பகுதியில் உள்ள சப்தகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு பள்ளி தாளாளர் வணங்காமுடி முதல்வர் பத்மாவதி மற்றும் ஆசிரியர்களான வினோதினி ,சத்தியா, முருகம்மாள், முனீஸ்வரி, பத்மா, ஷீலா, சாந்தா, நாகலக்ஷ்மி, மற்றும் 6 குழந்தைகள் உட்பட 21 பேர் இமாச்சல பிரதேசம் பகுதியில் உள்ள குலுமணாலி பகுதிக்கு கடந்த 21ஆம் தேதி பெங்களூர் வழியாக புது டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
அங்கிருந்து மணாலிக்கு 21ஆம் தேதி சென்றடைந்தனர். ஆனால் 22ஆம் தேதி சனிக்கிழமை காலை முதல் அங்கு கனமழை பெய்து வருவதால் அவர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

25 பேர் தவிப்பு
அவர்கள் டில்லியிலிருந்து 3 சமையலர்கள் மற்றும் ஒரு வழிகாட்டி ஒருவரையும் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். மொத்தம் இருபத்தைந்து பேர் அங்கு தற்போது ஊருக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.

சாலை வசதி இல்லை
சாப்பாடு மற்றும் இதர பிரச்சனைகள் இல்லாமல் உள்ளனர். ஆனால் ஊருக்கு நாளை காலை இங்கு வருவதாக இருந்தது. ஆனால் அவர்கள் அங்கு பெய்துவரும் கனமழையால் சாலை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்லி வந்து அங்கிருந்து பெங்களூர் வந்து ஓசூர் வரவேண்டி உள்ளது.

ஆட்சியருடன் பேச்சு
ஆனால் அந்த சாலைவசதி இல்லாததால் இன்னும் இரண்டு நாட்களில் வருவார்கள் என உறவினர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். அங்கிருந்து பள்ளி தாளாளர் வணங்காமுடி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகரன் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள குழு கலெக்டர் செல்வ மகேஷ் அவருடன் பேசியுள்ளார்.

ஆட்சியர் உறுதி
மீண்டும் ஊருக்கு திரும்ப தேவையான நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் வாக்குறுதி கொடுத்துள்ளதாக அவர் மொபைல் போன் மூலமாக நிருபர்களிடம் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications