'முக்கியமான பேப்பருடன்' விண்ணப்பம்..214 பொதுப் பணித்துறை இன்ஜினியர்களுக்கு ஒரே நாளில் டிரான்ஸ்பர்
கட்டு கட்டாக பணம் குவிந்ததை அடுத்து விருப்ப பணியிட மாறுதல் கேட்ட தமிழக பொதுப் பணித் துறையைச் சேர்ந்த 214 பொறியாளர்கள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: முக்கியமான பேப்பர்களுடன் விருப்ப பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த தமிழக பொதுப் பணித் துறையைச் சேர்ந்த 214 பொறியாளர்கள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக பொதுப் பணித்துறை கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த துறையில் இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், தலைமை பொறியாளர் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செயற்பொறியாளராக இருந்த 18 பேர் கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் 72 உதவி செயற்பொறியாளர்கள், 115 உதவி பொறியாளர்கள், 27 பேருக்கு செயற்பொறியாளராக பதவி உயர்வு அளித்து நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 214 பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், 'பொதுவாக பொதுப்பணித் துறையில் உள்ள பொறியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது ஒரே நாளில் 214 பேர் டிரான்ஸ்பர் செய்திருப்பது இதுவே முதல்முறை.
டிரான்ஸ்பருக்காக துறையின் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகளிடம் கட்டுக் கட்டாக பணம் அளித்துள்ளனர். அந்த அதிகாரிகள் வரும் 30-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறவுள்ளதால் ஒரே நாளில் 214 பேரை இடமாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications