For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் 218 இன்ஸ்பெக்டர்கள் கூண்டோடு டிரான்ஸ்பர்: கமிஷனர் உத்தரவு
சென்னை: சென்னையில் 218 இன்ஸ்பெக்டர்களை கூண்டோடு இடமாற்றம் செய்து கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்யக்கோரி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அடுத்தடுத்து காவல் துறையில் இடமாற்ற அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நேற்று 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது சென்னையில் சென்னையில் 218 இன்ஸ்பெக்டர்களை கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கமிஷனர் ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.
Comments
assembly election inspector transferred chennai tamilnadu சட்டசபைத் தேர்தல் இன்ஸ்பெக்டர்கள் சென்னை இடமாற்றம் தமிழ்நாடு
English summary
As the assembly elections is nearing, 218 Inspectors have been transferred in Chennai.