போலீஸார் உடை அணிந்து 22 சவரன் நகை கொள்ளை... சோழவரம் அருகே மர்ம கும்பல் கைவரிசை
திருவள்ளூர்: சோழவரம் அருகே போலீஸார் என கூறி வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதிமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் சண்முகசாமி (68). இவர் தனது வீட்டின் முன் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இரவு, சண்முகசாமி, அவரது மனைவி சொர்ண மாரியம்மாள் (64), கடையில் வேலை பார்க்கும் விக்னேஸ்வரன்(28) ஆகிய 3 பேரும் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, போலீசார் உடையணிந்த ஒருவர் உட்பட நான்கு பேர் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். மேலும் உங்களது வீட்டில் கடத்தல் பொருட்கள் வைத்துள்ளதால், சோதனை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள், நீங்கள் எந்த ஸ்டேஷனில் இருந்து வந்துள்ளீர்கள் என கேட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த அந்த கும்பல் அவர்களை தாக்கியுள்ளது. பின்னர் அனைவரையும் நாற்காலியில் கட்டிப்போட்ட அந்த கும்பல், கத்தி முனையில் சொர்ண மாரியம்மாள் அணிந்திருந்த தங்க சங்கிலிகள், பீரோவில் இருந்த நகைகள் என 22 பவுனை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த போலீஸார் தப்பிச்சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications