போலீஸார் உடை அணிந்து 22 சவரன் நகை கொள்ளை... சோழவரம் அருகே மர்ம கும்பல் கைவரிசை
திருவள்ளூர்: சோழவரம் அருகே போலீஸார் என கூறி வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதிமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் சண்முகசாமி (68). இவர் தனது வீட்டின் முன் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இரவு, சண்முகசாமி, அவரது மனைவி சொர்ண மாரியம்மாள் (64), கடையில் வேலை பார்க்கும் விக்னேஸ்வரன்(28) ஆகிய 3 பேரும் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, போலீசார் உடையணிந்த ஒருவர் உட்பட நான்கு பேர் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். மேலும் உங்களது வீட்டில் கடத்தல் பொருட்கள் வைத்துள்ளதால், சோதனை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள், நீங்கள் எந்த ஸ்டேஷனில் இருந்து வந்துள்ளீர்கள் என கேட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த அந்த கும்பல் அவர்களை தாக்கியுள்ளது. பின்னர் அனைவரையும் நாற்காலியில் கட்டிப்போட்ட அந்த கும்பல், கத்தி முனையில் சொர்ண மாரியம்மாள் அணிந்திருந்த தங்க சங்கிலிகள், பீரோவில் இருந்த நகைகள் என 22 பவுனை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த போலீஸார் தப்பிச்சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications