For Daily Alerts
Just In
ஸ்டிரைக்கின்போது இயங்கிய பல பஸ்கள் மீது விஷமிகள் தாக்குதல்.. கண்ணாடிகள் உடைப்பு
சென்னை: தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் சுமார் 23 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உத்தரவை தொடர்ந்து சில பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றின் மீது விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
சென்னை அண்ணாநகரில் மாநகர அரசுப்பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. அதேபோல சென்னை குரோம்பேட்டை,போரூர்,ஓட்டேரி மற்றும் விழுப்புரம்,கோபிசெட்டிபாளையம்,செய்யாறு போன்ற பகுதிகளில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதையடுத்து சென்னையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
English summary
Some 23 buses were atatcked and glasses have been broken in various parts of Tamil Nadu during the bus strike.
Story first published: Monday, May 15, 2017, 7:59 [IST]