நெருங்கி வரும் தேர்தல்: தமிழகத்தில் 25 டி.எஸ்.பி.,க்கள் அதிரடி இடமாற்றம்; டி.ஜி.பி.,உத்தரவு
சென்னை: தமிழகத்தில் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 25 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற மே மாதம் 22 ஆம் தேதியுடன் பதவிக் காலம் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகின்றது. இந்நிலையில் மாநிலத்தில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யக் கோரி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இதன் விளைவாக தமிழக காவல்துறையில் அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., விஜயகுமார் பாளைங்கோட்டை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மணியாச்சி டி.எஸ்.பி.,யாக கோவிந்தராஜ், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி.,யாக தனபால், நன்னிலம் டி.எஸ்.பி.,யாக அறிவானந்தன், திருவாரூர் டி.எஸ்.பி.,யாக சுகுமாறன், ஓட்டன்சத்திரம் டி.எஸ்.பி.,யாக ராஜா, கூடலூர் டி.எஸ்.பி.,யாக ஸ்ரீனிவாசலு உள்ளிட்ட 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி.அசோக்குமார் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.