செப்.28-ல் அமெ.துணைத்தூதரகம் முற்றுகை... மதிமுக, விசிக உட்பட 29 அமைப்புகள் அறிவிப்பு
சென்னை : போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசுக்கு ஆதரவான தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்காவைக் கண்டித்து, சென்னையில் உள்ள அந்நாட்டு துணைத் தூதரகத்தை வரும் 28 ஆம் தேதி முற்றுகையிடப் போவதாக ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 29 அமைப்புகள் அறிவித்துள்ளன.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மனித நேய மக்கள் கட்சித் துணைத்தலைவர் குணங்குடி அனீஃபா, வழக்கறிஞர் அங்கயற்கண்ணி ஆகியோர், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தனர்.

அப்போது அவர்கள், தமிழீழ இனப்படுகொலையை மறைத்து, கொலைகார இலங்கை அரசையே நீதிபதியாக்கும் வகையில், ஐநா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டுவருவதைக் கண்டித்து, மதிமுக, விசிக, மமக கட்சிகள் உட்பட 29 தமிழர் அமைப்புகள் சார்பில், வரும் 28-ம் தேதியன்று சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது.
தமிழர்கள் அமெரிக்கா சொல்லும் உள்நாட்டு பொறி முறையையோ அல்லது உள்நாட்டு பொறி முறையின் இன்னொரு வடிவமான கலப்பு பொறிமுறையையோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தவும்
ஐ.நா அமைப்பானது, 1948 முதல் தற்போது வரை ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும்,தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பையும் உடனே நடத்தவேண்டும்" என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில், ம.தி.மு.க., தமிழர் தேசிய முன்னனி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட 29 அமைப்புகள் பங்கேற்கின்றன.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications