இமானுவேல்சேகரன் குருபூஜை விழா... பரமக்குடியில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு.. இன்று உள்ளூர் விடுமுறை
பரமக்குடி : இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழவை முன்னிட்டு அங்கு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
பரமக்குடி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே இமானுவேல்சேகரன் நினைவிடம் அமைந்துள்ளது. அவரது 58-வது குருபூஜை விழா இன்று (வெள்ளிக் கிழமை) நடைபெறுகிறது.
இதில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், சமுதாய தலைவர்கள் பங்கேற்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

அஞ்சலி செலுத்த வருவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், சட்டம் -ஒழுங்கை பாதுகாக்கவும் பரமக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பரமக்குடி நகரில் நினைவிடம் செல்லும் 5 முனை சந்திப்பு, ஆர்ச் பகுதி மற்றும் சந்தைக்கடை தெரு ஆகிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார்சிங், டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோரின் வழித்தடம், பதற்றமான இடங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications