சேலத்தில் பரபரப்பு... மழையில் நனைந்து சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் இரவு பெய்த கன மழையால் சுவர் நனைந்து இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.
வாய்க்கால்பட்டறை என்ற இடத்தில் இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது. நேற்று இரவு நல்ல மழை பெய்தது. இதில் சீனிவாசன் என்பவரது வீட்டுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த சீனிவாசன், அவரது மகள் ஜானகி, பேத்தி நந்தினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனிவாசனின் மனைவி கல்யாணி, பேரன், இன்னொரு பேத்தி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications