மாமல்லபுரம் கடலில் குளித்த 3 பேர் மூழ்கினர் - ஒருவர் சடலம் மீட்பு
மாமல்லபுரம் கடலில் குளித்த 3 கல்லூரி மாணவர்களை ராட்சத அலை இழுத்து சென்றது. தீவிர தேடுதல் பணியில் மாமல்லபுரம் போலீசார் ஈடுபட்டதில் ஒரு மாணவர் உடல் மட்டுமே சிக்கியது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாமல்லபுரம் கடலில் குளித்த காஞ்சிபுரம் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேரின் உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் காஞ்சிபுரம் பகுதியில் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர்.
6 பேரும் கடலில் குளிக்கும் போது இதில் வெங்கடேசன், ராம்கி, விஜயகுமார் ஆகிய மூன்று பேரை ராட்சத அலை இழுத்து சென்றது. இதில் மாமல்லபுரம் போலிசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெங்கடேசன் உடலை கண்டெடுத்தனர். மேலும் மீனவர்களின் உதவியோடு காணாமல் போன மாணவர்கள் ராம்கி மற்றும் விஜயகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications