For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை மயிலாப்பூரில் துப்பாக்கியுடன் சுற்றிய மூவர் கைது

சென்னை மயிலாப்பூரில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மூன்று இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மயிலாப்பூரில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிய 3 இளைஞர்களை பிடித்து விசாரித்த போலீசார், அவர்களிடமிருந்து முன்னுக்குப் பின் முரணான வகையில் பதில் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.

3 held for carrying pistol without license at Mylapore

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, ஒரு கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து கைது செய்யப்பட்ட 3 பேரிடம் மயிலாப்பூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான இளைஞர்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் துப்பாக்கி, கத்தியுடன் சுற்றித் திரிந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு சமூக விரோத, தீவிரவாத கும்பல்களோடு தொடர்புள்ளதா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மேலும், கைதான இளைஞர்கள் கூலிப்படையினரா அல்லது, நாச வேலைக்கு திட்டமிட்டு வந்தனரா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

English summary
Three arrested in Chennai Mylapore for carrying pistol without license.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X