Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெருந்துறையில் மழைக்கு ஒதுங்கிய சாமிநாதன்... மரணத்தை பரிசளித்த பாப்பாத்தி

மழையின் நனைந்து நடுக்கத்துடன் வந்த 70 வயது முதியவரை கட்டாயப்படுத்தி உறவு கொண்டதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மூவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பெருந்துறையில் மழையின் நனைந்து நடுக்கத்துடன் வீட்டிற்கு வந்த முதியவரை கட்டாயப்படுத்தி உறவு கொண்டதால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். கள்ளக்காதலி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சின்னமடத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன், 70, மிளகாய் வியாபாரம் செய்து வந்த இவருக்கு மாலதி என்ற மகளும், மருமகன் குணசேகரனும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பவானியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு மகனும், மருமகளும் சென்றனர்.

3 held for Old man death case near Perunthurai

ஊரில் இருந்து திரும்பி வந்துபார்த்த போது, சாமிநாதன் வீட்டில் இல்லை. பெருந்துறை புது பஸ் ஸ்டாண்டில், சாமிநாதனின் இரு சக்கர வாகனம் மட்டும் இருந்தது. போலீசில் புகார் அளித்து அவரைத் தேடிய போது சிப்காட் அருகே மலையாண்டி காட்டுப்பகுதியில் பிணமாகக் கிடந்தார்.

பெருந்துறை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் அணிந்திருந்த நகைகள், பணம் அப்படியே இருந்தது. சாமிநாதன் தனது இரு சக்கர வாகனத்தை பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு சிப்காட் பகுதிக்கு சென்றார் என்பது தெரியவில்லை.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்
சென்னிமலை ஒன்றியம் வரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழியிடம் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தனர். அவர்கள் பெருந்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. விஜயமங்கலம் விண்டெக்ஸ் நகரில் வசித்து வருபவர் பாப்பாத்தி,57, கணவனை இழந்த இவர் தனியாக வசித்து வருகிறார். சாமிநாதனும் பாப்பாத்தியும் பல வருடங்களாக தொடர்பில் இருந்துள்ளனர்.

நவம்பர் 30ஆம் தேதி மதியம் பாப்பாத்தி வீட்டிற்கு சாமிநாதன் வந்தார். அப்போது அவர் மழையில் நனைந்து நடுக்கத்துடன் வந்திருக்கிறார். அந்த நிலையிலும் உறவுக்கு அழைத்தாரம் பாப்பாத்தி. சாமிநாதன் மறுத்தும் அவருடன் பாப்பாத்தி வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட்டாராம்.

அப்போது சாமிநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது. இதனால், பயந்து போன பாப்பாத்தி சென்னிமலை அருகே வாய்பாடியில் வசிக்கும் தன் மகன் கிருஷ்ணனுக்கும்,சென்னிமலை ஓட்டப்பாறை பகுதியில் குடியிருக்கும் சம்பந்தி ஈஸ்வரியிடமும் கூறி அவர்களை வரவழைத்தார்.

இருவரும் பாப்பாத்தியுடன் சேர்ந்து சாமிநாதன் சடலத்தை சமையலறையில் மறைத்து வைத்துள்ளனர். இரவான பின்னர் மூவரும் கிருஷ்ணனுக்கு சொந்தமான காரில் சாமிநாதன் சடலத்தை சிப்காட் பகுதியில் உள்ள ஓடைக்காட்டூர் பகுதியில் போட்டுள்ளனர்.

பாப்பாத்தி வீட்டில் நின்றிருந்த சாமிநாதனின் இரு சக்கர வாகனத்தை பெருந்துறை பஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு வந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து பாப்பாத்தி, அவரது மகன் கிருஷ்ணன், சம்பந்தி ஈஸ்வரி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குக் பதிவு செய்தனர். பெருந்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

நேரம் காலம் பார்க்காமல் வயதானவர் என்றும் பார்க்காமல் உறவில் ஈடுபட்ட பாப்பாத்தியினால் உயிரை விட்டுள்ளார் சாமிநாதன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+