மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
மதுராந்தகம் சார் ஆட்சியர் அன்புசெல்வன், சென்னை மாநகராட்சி ஆணையராக (வருவாய் மற்றும் நிதி) நியமிக்கப்பட்டுள்ளார்.

தாராபுரம் சார் ஆட்சியர் ராஜாமணி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை சார் ஆட்சியர் எம். விஜயலட்சுமி சென்னை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்












Click it and Unblock the Notifications