சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட 3 குழந்தைகள் பரிதாப சாவு!
சென்னையில் அரசு மருத்துவமனையில் தடுப்பு ஊசி போடப்பட்ட 3 குழந்தைகள் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டது. தடுப்பு ஊசி போட்ட பின்னர் காய்ச்சல் ஏற்பட்டு 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தடுப்பு ஊசி போட்டு 24 மணி நேரத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளதால் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
தடுப்பு ஊசி போடப்பட்ட 3 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தலைவர் குணசேகரன் கூறியதாவது: கிருமி தொற்று ஏற்பட்டதே குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணம். பிறந்து சில நாள் வரை கிருமி தொற்று ஏற்படாமல் பெற்றோர் நன்கு கவனித்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தருமபுரி அரசு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications