For Daily Alerts
Just In
திண்டுக்கல் அருகே டூவீலர்கள் மீது தனியார் பஸ் மோதி 3 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் பஞ்சம்பட்டிப்பிரிவில், இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிழந்தவர்களின் உடலை போஸ்ட்மார்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.
இரு சக்கர வாகங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
3 killed when a Private bus collided into two wheeler near Batlagundu, Dindigul
Story first published: Friday, March 10, 2017, 16:36 [IST]