ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 கொலைகள்- பதட்டத்தில் வேலூர்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் - புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் இடையே ரயில்வே ஊழியர்கள் நேற்று காலை 9 மணிக்கு நடந்து சென்றபோது அங்கு ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதனையடுத்து அரக்கோணம் காவலர்கள் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் பிணமாக கிடந்தவ 35 வயதுடைய அந்த நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

அதேபோன்று அணைக்கட்டு அடுத்த செட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் சின்னா என்பவர் கூலித் தொழிலாளி. இவர் மாந்திரீகத் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி வெளியே சென்ற சின்னா வீடு திரும்பவில்லை.
நேற்று காலை 9 மணிக்கு கரடிக்குடி அடுத்த சென்றாயன் கொட்டாய் கிராமம் அருகில் உள்ள ராஜாமலையில் அவர் பிணமாக கிடந்தார். வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் ஒடுக்கத்தூரைச் சேர்ந்த சிலருக்கு சின்னா பில்லி சூனியம் வைத்தது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மற்றொருவர் குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பத்தைச் சேர்ந்தவர் பெருமாள். நேற்று முன் தினம் இவர் வீட்டில் தனியாக படுத்திருந்தார். நேற்று காலை 9 மணிக்கு அவரது மகள் பாமா தந்தையை பார்க்க வீட்டுக்குச் சென்றார். அப்போது தலையில் படுகாயங்களுடன் பெருமாள் இறந்து கிடந்தார்.
இதனையடுத்து குடியாத்தம் போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பெருமாளை அடித்துக் கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த சொத்து பத்திரங்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்த கொலைகள் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications