சென்னை புரசைவாக்கத்தில் தனியார் ஹோட்டலில் தீ விபத்து!
சென்னை புரசைவாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை புரசைவாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த ஹோட்டலில் மூன்று ஊழியர்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த தனியார் ஹோட்டலின் சமையலறை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. எண்ணெய் பொருட்களில் ஏற்பட்ட தீ காரணம் இந்த தீ பரவியதாக கூறப்படுகிறது.

விபத்தை தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து இருக்கிறது. சமையலறையில் மாட்டி இருக்கும் மூன்று ஊழியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த பகுதியில் அடுத்ததடுத்து நிறைய கடைகள் இருப்பதால் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி ஆகும். இதனால் அங்கு தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications