3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்: உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வா நியமனம்!
சென்னை: தமிழக அரசின் 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வித் துறை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைகள் கழக மேலாண் இயக்குனர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையாளராக (பொறுப்பு) பணியாற்றும் அபூர்வா, உயர்கல்வித் துறை செயலாளராக கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஹேமந்த்குமார் சின்ஹாவுக்கு பதிலாக மாற்றப்பட்டு உள்ளார்.
ஹேமந்த்குமார் சின்ஹா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளரான மோகன் பியாரேவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டு உள்ளார். மோகன் பியாரே இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையாளராக மாற்றப்பட்டு உள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.