சென்னையில் குடோன் பூட்டை உடைத்து 20 'ஏசி'க்களை கூலாக கொள்ளையடித்த மூவர் கைது!

சென்னையில் ஒரு குடோனில் பூட்டை உடைத்து 20 ஏசி மெஷின்களை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    20 ஏசிக்களை கூலாக கொள்ளையடித்த மூவர் கைது!- வீடியோ

    சென்னை: சென்னையில் ஒரு குடோனில் பூட்டை உடைத்து ஏசி மெஷின்களை திருடியதற்காக 3 பேரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர்.

    மதுரவாயல் பல்லவன் நகர் 1-ஆவது தெரு பகுதியில் இருப்பவர் பாலசுப்பிரமணி. இவர் குடோனில் ஏர்கண்டிஷனர்கள் (ஏசி) வைத்து விற்பனை செய்து வருகிறார் . இந்நிலையில் அவர் கடந்த 9- ஆம்தேதி குடோனை மூடி விட்டு கோயம்பேடு பகுதியில் உள்ள தனது மற்றொரு கடைக்கு சென்றுள்ளார்.

    3 were arrested for 20 ACs theft case in Chennai

    ஒரு வாரம் கழித்து மதுரவாயலில் உள்ள குடோனுக்கு சென்று பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 20 ஏசிக்கள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஏசி மெஷின்களை திருடியது வேலூர் மாவட்டம் குடியாத்தம் ,வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (22) ,பவித்ரன் (23) மற்றும் சுரேந்தர் (32) ஆகியோர் என்று தெரியவந்தது.

    இதையடுத்து மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் திருடப்பட்ட ஏசிக்களை வேலூரில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேலூரில் இருந்து அவற்றை மதுரவாயல் குற்றப்பிரிவு ஆய்வாளரன ஈஸ்வரன் தலைமையிலான படையினர் மீட்டு வந்தனர். பின்னர் மூவர் மீதும்திருட்டு வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+