கோவை அருகே கோயில் திருவிழாவில் பரபரப்பு.. பிரசாதம் சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி!
கோயில் விழாவில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
கோவை: கோயில் விழாவில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு திடீர் வாந்தி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, மேட்டுப்பாளையம் நாடார் காலனி ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில், சமையலுக்கு ஏற்றதல்ல என குறிப்பிடப்பட்டுள்ள நெய்யை கொண்டு பொங்கல் உள்ளிட்ட பிரசாதம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரசாதத்தை பக்தர்களுக்கும் வழங்கி உள்ளனர். நேற்று இரவு பிரசாதம் சாப்பிட்ட 2 குழந்தைகள் உள்ளிட்ட 30 பேருக்கு வாந்தி உள்ளிட்ட உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
இவர்கள் அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications