புதுக்கோட்டையில் பயங்கரம்... தாயின் தலையை வெட்டி எடுத்து வந்த மகனால் பரபரப்பு!
புதுக்கோட்டை அருகே சொத்து தகராறில் தாயின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கு வந்த மகனால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாயின் தலையை துண்டாக வெட்டி எடுத்துச் சென்று போலீஸ் நிலையத்தில் மகன் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மறவன்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த். 30 வயதான ஆனந்த் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இவரின் தாய் ராணிக்கும் இவருக்கும் சொத்துகளை பிரிப்பது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் தனது பங்கு சொத்தை பிரித்துத் தருமாறு ஆனந்த் தாயாரிடம் கேட்டுள்ளார். அதற்கு ராணி மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த ஆனந்த், தனது தாய் என்றும் பாராமல் ராணியை கூர்மையான ஆயுதத்தால் வெட்டினார். அப்போதும் ஆத்திரம் தீராமல் ராணியின் தலையை துண்டாக வெட்டி எடுத்தார். அந்த தலையுடன் சாலையில் நடந்து சென்று கறம்பக்குடி போலீசில் சரணடைந்தான்.
சாலையில் தலையுடன் நடந்து சென்ற ஆனந்தைப் பார்த்த மக்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து ராணியின் உடலைப் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். ஆனந்தை கைது செய்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர். பெற்ற மகனாலேயே கொலை செய்யப்பட்ட ராணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனது கணவரை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications