நாமக்கல் அருகே 3000 கடத்தல் மணல் மூட்டைகள் பறிமுதல்: கனிமவளத்துறை அதிரடி
கடத்தப்படவிருந்த 3000-க்கும் அதிகமான மணல்மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கடத்தப்படவிருந்த மணல் 3000-க்கும் அதிகமான மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரையடுத்துள்ள பொன்மலர்பாளையம், கொந்தலம் போன்ற பகுதிகளிலிருந்து காவிரியாற்றிலிருந்து மணலை மூட்டைகளில் கட்டி இருசக்கர வாகனங்கள் மூலம் கடத்தப்படுவதாக மாவட்ட கனிமவளத்துறைக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இந்த புகார்களையடுத்து, மாவட்ட கனிமவளத்துறை AD.ஜெயந்தி மற்றும் வருவாய் ஆய்வாளர் தமிச்செல்வி ஆகியோர் தனித்தனியாக அந்த பகுதிகளில் நேற்றிரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 3000-க்கும் அதிகமான மணல் மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றினை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை கண்டதும், மணல் மூட்டைகளை கீழே போட்டுவிட்டு இருசக்கர வாகனங்களில் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications