சென்னையில் 37 பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளது.. பேரிடர் ஆணையம் வார்னிங்.. எந்தெந்த ஏரியா தெரியுமா?
சென்னை: சென்னையில் 306 இடங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் என்று தமிழக பேரிடர் மேலாண்மை வாரியம் கண்டறிந்து அறிவித்துள்ளது. அதில் 37 பகுதிகள் மிக மோசமான பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாம்.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகரில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்தால் அடையாற்றில் திறந்துவிடப்பட்ட கூடுதல் நீரும் சேர்ந்து கொண்டு சென்னையின் பல பகுதிகளை மூழ்கடித்தது.

கடும் சேதம்
ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வீடுகளுக்கு சப்ளை செய்யும் அளவுக்கு நிலைமை மிக மோசம் அடைந்தது. உயிரிழப்புகளும், பல கோடி சொத்துக்களும் சேதமடைந்தன. இதுகுறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆய்வு செய்து தற்போது ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இப்போது நிலைமை பரவாயில்லை
வெள்ளத்தின் காரணமாக சென்னை மாநகரத்தில் உள்ள 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 859 பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன என்றும், தூர்வாருதல், செடி கொடிகளை அகற்றுதல் உள்ளிட்ட மராமத்து பணிகளின் காரணமாக இந்த எண்ணிக்கை இப்போது குறைவடைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடையாறு மண்டலம் அதிகம்
இப்போதுள்ள நிலையில் சென்னையில் 306 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள பகுதிகளாக இனம் காணப்பட்டுள்ளன. அதில் 37 பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அப்படி மிக மோசமான பாதிப்புக்கு வாய்ப்புள்ளவற்றில், 24 பகுதிகள் அடையார் மண்டலத்திற்கு உட்பட்டவை என்பது அதிர்ச்சி தகவல். கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் அடையாறு ஆகிய பகுதிகள் இப்படி மோசமான பாதிப்புக்கு வாய்ப்புள்ள பகுதி பட்டியலில் வருகின்றது.

தேனாம்பேட்டை மண்டலம்
தேனாம்பேட்டை மண்டலத்தில் நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை மற்றும் ஏஆர் புரம் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ள பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ளன. வளசரவாக்கம் மண்டலத்தில் 27 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications