சென்னை நகரத்தில் மழைவெள்ளத்தில் மிதந்த 35 சடலங்கள்....
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை மூழ்கடித்த கனமழையில் சிக்கி உயிரிழந்த 35 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வரலாறு காணாத கனமழை சென்னையை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை, வெள்ளத்தால் சென்னை நகரமே தீவுகளாகி துண்டாகிப் போனது.

மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்புகிறது சென்னை. அதேநேரத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வருகிறது.
இன்று மட்டும் மொத்தம் 35 சடலங்கள் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. வெள்ளம் வடியவடிய இன்னும் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications