காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுக்கு 35 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலக தேவையில்லை என அவருக்கு ஆதரவாக 35 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் எனக் கூறி, 15 மாவட்ட நிர்வாகிகள் நேற்று (29ஆம் தேதி) கூட்டாக அறிக்கை விடுத்திருந்தனர்.

35 District cadres support TNCC chief Gnanadesikan

இவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள்.

இந்நிலையில், ஞானதேசிகன் பதவி விலக தேவையில்லை எனக்கூறி, அவருக்கு ஆதரவாக 35 மாவட்ட நிர்வாகிகள் இன்று அறிக்கை விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில், தேர்தலின்போது 24 மணி நேரமும் காங்கிரஸ் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டுள்ளது என கூறியுள்ள அவர்கள், ப.சிதம்பரம் ஒட்டுமொத்த காங்கிரசின் வெற்றிக்காக ஆற்றிய முழுமையான பணி என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது யார்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+