நள்ளிரவில் ரோந்து சென்ற எஸ்.ஐ., ஏட்டை இரும்புக் கம்பியால் தாக்கிய 4 பேர் கைது
திருச்சி: திருச்சியில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோரை தாக்கியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி நீதிமன்ற எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலுக்கு செல்ல உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரம் உள்ள சாலையில் அரசு மருத்துவமனை போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்துமாறு போலீசார் கைகாட்டியும் அது நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது.

இதையடுத்து போலீசார் இது குறித்து புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அழகருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் அழகர் ஏட்டு செந்திலுடன் பைக்கில் சென்று அந்த ஆட்டோவை நிறுத்த முயன்றார். ஆனால் அந்த ஆட்டோ நிற்காமல் சென்றது. இதையடுத்து அவர் அந்த ஆட்டோவை பைக்கில் விரட்டிச் சென்று புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலை அடுத்து உள்ள அம்மையப்ப நகர் அருகே தடுத்து நிறுத்தினார்.
ஆட்டோவில் இருந்த 5 பேர் கீழே இறங்கி வந்து அழகர் மற்றும் செந்திலை தாக்கினர். அப்போது செந்தில் 2 வாலிபர்களை பிடித்தவுடன் அவர் பிடியில் இருந்து தப்பிய அவர்கள் ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அவர் நெற்றியிலும், அழகரின் காது பகுதியிலும் தாக்கினர்.
அந்த கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றது. ரத்தம் சொட்ட சொட்ட அழகரும், செந்திலும் பைக்கில் ஆட்டோவை விரட்டிச் சென்றனர். அந்த கும்பல் கனரா வங்கி காலனி அருகே ஆட்டோவை விட்டுவிட்டு தப்பியோடியது. இது குறித்து அழகரும், செந்திலும் அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து அழகரையும், செந்திலையும் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தப்பியோடிய கும்பலை தேடி அதில் தில்லைநகர் ரகுமானியாபுரத்தை சேர்ந்த காதர், குழுமணியை சேர்ந்த மனோஜ் குமார் உள்பட 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 5வது நபரை தேடி வருகிறார்கள்.
புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் ஆறுகண் பாலம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாததால் அங்கு தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த வழியாக வந்த பஸ் கண்டக்டரை ஒரு கும்பல் தாக்கி அவரது செல்போனை பறித்துச் சென்றது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications