கோவை: கேஸ் கசிவினால் வெடி விபத்து: 4 பட்டாசு தொழிலாளர்கள் பலி; 10 பேர் காயம்
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கேஸ் கசிவில் ஏற்பட்ட வெடி விபத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கோவை மாவட்டம் அங்கலக்குறிச்சி அருகே இன்று 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எந்தவித அனுமதியும் இன்றி பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அருகில் உள்ள வீட்டில் இருந்த சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கேஸ் கசிவு பட்டாசு தயாரிக்கும் இடத்திற்கும் பரவியுள்ளது.
அப்போது, மருந்துகள் ஒன்றோடு ஒன்று உரசின, இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியது. எதிர்பாரமல் ஏற்பட்ட இந்த விபத்தில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தவர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications