நெல்லை அருகே மணல் லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து- 4 பேர் பரிதாப பலி
Subscribe to Oneindia Tamil
வள்ளியூர்: நெல்லை அருகே இன்று மாலை நிகழ்ந்த வாகன விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நெல்லை அருகே வள்ளியூர் நான்குவழிச் சாலையில் இன்று மாலை அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது மணல் லாரியும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.

இதில் 2 வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்தன. இதில் 2 பயணிகள் உள்பட 4 பேர் துடிதுடித்து இறந்தனர்.

இவ்விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications