விடுமுறையை கொண்டாடிய போது சோகம்.. பாபநாசம் தலையணையில் மூழ்கி 4 பேர் பலி
நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையணையில் மூழ்கி சென்னையை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சென்னையைச் சேர்ந்த நக்கீரன், ஸ்ரீனிவாசன், புதுச்சேரியை சேர்ந்த வசந்த் மற்றும் சதீஷ் ஆகியோர், விடுமுறையைக் கொண்டாடுவதற்காக பாபநாசம் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். 4 பேரும் பொதிகை மலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். பொதிகை மலைக்கு பாபநாசம் வழியே தற்போது யாரும் செல்வதில்லை என்பதை அறிந்த அவர்கள் 9-ந்தேதி தலையணையில் குளிக்க சென்றார்கள்.

ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்கள், கரை திரும்ப முடியாமல், அணையில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்துவந்த வந்த வி.கே.புரம் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நேற்று இரவு ஒருவரின் உடலை மீட்டனர்.
இதனிடையே மற்ற 3 பேர் உடலும் உள்ளே கிடக்கலாம் என்று சந்தேகம் அடைந்த போலீசார் இரவு அவற்றை தேடும் பணியில் ஈடுபட்டார்கள். அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இன்று காலையில் 3 பேர் உடலும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட உடல்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, உடற்கூறு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. இந்த சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று திருநெல்வேலி முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications