குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைத்தது 4 பேர் கொண்ட கும்பல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு வந்த குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டை வெடிக்கச் செய்த சதித் திட்டத்தில் நான்கு பேருக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நான்கு பேர் கொண்ட கும்பல்தான் வெடிகுண்டுகளை வைத்து அதை வெடிக்கவும் செய்தது என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

4 member gang involved in Chennai blast?

இரட்டை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூர் அல்லது சென்னையில் ரயில் நின்றபோதே வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரு ரயில் நிலையங்களிலும் உள்ள சிசிடிவி மேரராவில் பதிவான காட்சிகளை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் குண்டுவெடிப்பு நடந்த இரு பெட்டிகளிலும் தலா இருவர் மர்ம பையுடன் ஏறியது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் 4 பேரும் குண்டு வைத்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ள போலீஸார் அவர்கள் யார் என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நான்கு பேரும் சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளிகளா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இவர்கள் நான்கு பேர் யார் என்ற அடையாளம் தெரிந்தால் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குழப்பம் சற்று தீரும் என்று கருதப்படுவதால் இந்த கோணத்தில் தற்போது போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.--

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+