தருமபுரியில் 13 வயது சிறுமியுடன் திருமணம்- மணமகன் உட்பட 4 பேர் கைது
தருமபுரி: தருமபுரியில் 13 வயது சிறுமியை திருமணம் செய்ய மாப்பிள்ளை உள்ளிட்ட நால்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி ஊராட்சி நமாண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த சலவைத் தொழிலாளர் சிவன். இவரது மனைவி செல்வி.
இவர்களது 13 வயது மகளுக்கும், பாலக்கோட்டை சேர்ந்த சென்னையன், பழனியம்மாள் தம்பதியரின் மகன் பிரசாந்த் என்பவருக்கும் கடந்த 2 ஆம் தேதி தருமபுரி அருகே பெரியாம்பட்டியில் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் 13 வயது சிறுமிக்கு இளம்வயது திருமணம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து இளம்வயதஐ சிறுமிய் திருமணம் செய்த பிரசாந்த், அவரது பெற்றோர் சென்னையன், பழனியம்மாள் மற்றும் செல்வி ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவனை போலீசார் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications