4 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் கைது
குடும்பத் தகராறில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி: சீர்காழி அருகே கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன். இவர் நாகை மாவட்டம் திருப்பங்கூரை சேர்ந்த தேவி என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். திருமணம் நடந்த முதல் மாதத்திலிருந்தே இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சரவணன் தன் மனைவி தேவியிடம், அவரது பெற்றோரிடமிருந்து பணம் வாங்கி வருமாறு வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், இதனால் கணவன் - மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நான்கு மாத கர்ப்பிணியான தேவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவனின் தொந்தரவு தாங்க முடியாமல் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், சரவணன் திருப்பங்கூருக்கு வந்து தேவியை வீட்டுக்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதற்கு தேவி மறுப்பு தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் தேவியின் தலையின் பின்புறத்தில் அடித்துள்ளார். இதில், தேவி வீட்டின் சுவற்றில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தேவியின் பெற்றோர், வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து தேவியின் கணவர் சரவணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications