திருப்பூர் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்.. குடோனுக்கு சீல்.. ஒருவர் கைது
2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Recommended Video

திருப்பூர்: திருப்பூர் அருகே 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ குட்காவினை பறிமுதல் செய்த அதிகாரிகள் போதை பொருட்களை பதுக்கி வைத்த குடோனையும் இழுத்து மூடி சீல் வைத்தனர்.
ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வருகின்ற. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் புகார்களின்பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்து குட்கா, பான்மசாலா போன்றவற்றினை பறிமுதல் செய்தும் வருகின்றனர். நேற்று முன்தினம்கூட கோவை ராஜவீதியில் உள்ள சந்திரா டிரேடர்ஸ் என்ற கடையில் வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 750 கிலோ குட்கா பொருட்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில், திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையத்திலும் இதேபோல பதுக்கி வைக்கப்பட்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கணபதிநகரில் உள்ள ஒரு குடோனில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிகளில் விரைந்து சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, குட்கா பொருட்கள் பதுக்கி மூட்டை மூட்டையாக வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து அவற்றினை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த குடோனை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். இதுதொடர்பாக சுரேஷ் என்பவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications