ராமேஸ்வரம் மீனவர்கள் 41 பேர் விடுதலை: மன்னார் நீதிமன்றம் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
மன்னார்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 41 பேரை விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 7ந் தேதி 21 மீனவர்கள், ஆகஸ்ட் 6ந் தேதி 20 மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை அனுராதபுரம் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களது காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் மீனவர்கள் வந்த 10 படகுகளின் உரிமையாளர்களும் வரும் டிசம்பர் மாதம் 11ந் தேதி இலங்கை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications