For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைமைச் செயலகத்தில் ஒரே நாளில் 45 பேர் ஓய்வு... பிரிவுபச்சார விழாக்களால் பரபரப்பு!

தலைமைச் செயலகத்தில் இன்று ஒரே நாளில் 45 பேர் ஓய்வு பெற்றதால் அங்கு நடத்தப்பட்ட பிரிவுபச்சார விழாவால் கலகலப்பாக இருக்கிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று ஒரே நாளில் 45 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தமிழக தலைமைச் செயலகத்தில் 34 துறைகள் உள்ளன. இங்கு செயலர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

45 officials were retired from TN Secretariat

சட்டசபை பேரவை செயலர் ஜலாலுதீன் இன்று ஓய்வு பெற்றனர். இவருடன் அதே துறையை சேர்ந்த 9 பேரும், நிதித்துறையில் 10 பேரும், பொதுத் துறையில் 8 பேரும், சட்டத்துறையில் இருவரும், சிறப்பு திட்ட செயலாக்கம், கால்நடைத் துறை இந்நிலையில் தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் முதல் செயலர் வரை 21 துறைகளைச் சேர்ந்த 45 பேர் இன்று ஓய்வு பெற்றனர்.

சட்டசபை கூடுதல் செயலர், துணைச் செயலர் நிலையில் உள்ளவர்களும் ஓய்வு பெறுகின்றனர். ஜலாலுதீன் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, கூடுதல் செயலராக இருந்த பூபதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவுள்ளது. மேலும் புதியவர்களும் தேர்வு செய்யப்படுவர் என தெரிகிறது.

இவர்கள் ஓய்வு பெறுவதால் பிரிவு உபசார விழா என தலைமைச் செயலகமே பரபரப்பாக உள்ளது.

English summary
Different levels that is Secretary to staffs nearly 45 are going to retire today. Farewell functions are conducting in TN Secretariat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X