Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்கே நகரில் 45000 போலி வாக்காளர்கள் நீக்கம்.. ஹைகோர்ட்டில் தெரிவித்த தேர்தல் ஆணையம்!

ஆர்கே நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை ஆர்கே நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர்கள் 43,861 பேர் உள்ளதால், அவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் வரை, அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என்று உத்தரவிடக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

45000 fake voters have been dismissed from the RK Nagar constituency election commission said in Chennai high court

அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர் கேர் நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அப்போது 50,100 ஓட்டுகள் கூட வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய இடம் வகிக்கும் என திமுக வழக்கறிஞர் வில்சன் வாதமிட்டார். மேலும் ராதாபுரம் தொகுதியில் 42 வாக்குகள் வெற்றியை தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நீக்கப்பட்ட போலி வாக்காளர்கள் விவரம் நாளை இணையத்தில் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன் மூலம் போலி வாக்காளர்கள் யார் என்பது தெரியவரும். திமுகவின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+