தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை தொடர்ந்தும் துண்டிப்பு! நாளை 47 ரயில்கள் ரத்து!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை மூழ்கடித்த பெருமழை வெள்ளத்தால் நாளையும் ரயில் சேவைகள் முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து புறப்படும் 24 ரயில்களும், சென்னைக்கு வரும் 23 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து நாளை புறப்படும் திருச்செந்தூர், பழனி, ராமேஸ்வரம், புதுச்சேரி, திருச்சி, வைகை, பல்லவன், முத்துநகர், பொதிகை, பாண்டியன், நெல்லை என அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களுமே ரத்து செய்யப்பட்டுவிட்டன.

இதேபோல் நாளை சென்னைக்கு வந்து சேரும் குருவாயூர் உள்ளிட்ட 23 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் 3வது நாளாக சென்னை நகரம், தென்மாவட்டம் மற்றும் இதர பகுதிகளில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு தீவாக தனித்துவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications