4-வது நாளாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
இடிந்தகரை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் 4வது நாளாக இன்றும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 900 நாட்களுக்கு மேலாக அம்மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக இப்போது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு தொடங்கியுள்ளது.
இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் 4வது நாளாக நீடித்து வருகிறது.

தரமற்ற உபகரணங்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டிருக்கும் முதல் 2 அணுஉலைகளின் நம்பகத்தன்மை குறித்து பரிசோதிக்க வேண்டும், 3-வது, 4-ஆவது அணு உலை அமைக்க கூடாது, உச்சநீதிமன்றம் தெரிவித்த 15 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவை போராட்டக் குழுவின் கோரிக்கைகள்.












Click it and Unblock the Notifications