பசுமை வழிசாலை எதிர்ப்பு: 5 மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
5 மாவட்டங்களில் மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை: சேலம்-சென்னை பசுமைவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் இன்று தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சேலம்-சென்னை இடையே பசுமை வழி சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 277 கிலோ மீட்டரில் அமையும் இந்த சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதனால் விளைநிலங்கள், நீர் நிலைகளை என இயற்கை வளங்களை அழித்து பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

கதறி அழுத பெண்கள்
தங்களுடைய நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், திட்டத்துக்கு நிலம் வழங்கப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றி, 5 மாவட்டங்களிலுள்ள கிராம மக்கள் பலவகை போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஆனாலும் தமிழக அரசு பசுமை வழிச்சாலை திட்டத்தினை அமைப்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. தங்கள் கண்ணெதிரிலேயே நிலம் பறிபோவதை பார்த்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சிலர் மயங்கி விழுதனர். மேலும் பலர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். மக்கள் தங்கள் எதிர்ப்புகளை பல வழிகளில் தெரிவித்தும், சேலம் பூலாவரி கிராமத்தில் கற்களை நடும் பணியானது நேற்றுடன் முடிவடைந்தது.

திருவண்ணாமலையில் சர்வே
திருவண்ணாமலை மாவட்டத்தில் 124 கிலோமீட்டர் தொலைவு சாலை அமைய உள்ளது. அவ்வாறு அமையும் பட்சத்தில் இந்த மாவட்டத்தில் சுமார் 92 கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவே பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதில், 30 கிலோ மீட்டர் தொலைவிற்கு செங்கம், கலசப்பாக்கம் தாலுக்காக்களில் நில அளவீடு எடுக்கும் பணியினை முடித்துவிட்டு தற்போது மண்மலை, காத்தமடுவு கிராமங்களுக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர்.

நேரடி பாதிப்பு
இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் தற்போது நில அளவீடு செய்யும் பணிகளில் மும்முரமாக உள்ளனர். இதனால் இந்த பசுமை வழிச்சாலையினால் முழுவதுமாகவும் அளவுக்கு அதிகமாகவும், நேரிடையாகவும் பாதிக்கப்படும் 5 மாவட்ட மக்கள் இன்று கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

5 மாவட்ட மக்கள் போராட்டம்
இந்த திட்டத்தை கைவிட கோரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்ட மக்களும், விவசாயிகளும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 92 கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கறுப்பு கொடியை ஏற்றி வைத்துள்ளனர். இவ்வாறு பசுமை வழிசாலை திட்டத்துக்கு 5 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கணக்கான மக்கள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications