ஒகேனக்கல் வெள்ளத்தில் சிக்கி தாய், மகன் உள்பட 6 பேர் பலி... 10 மாத குழந்தையும் உயிரிழந்த சோகம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஓகனேக்கல் அருகே காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி தாய், மகன் உள்பட 6 பேர் பலியானார்கள். 10 மாடத குழந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்தது. இதில் தாய், மகன் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மாறுகொட்டாய் அருகே சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்றுள்ளனர்.
அந்தப் பரிசலில் பரிசல் ஓட்டி உள்பட 6 பேர் இருந்தனர். அந்தப் பரிசல் திடீர் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 10 குழந்தை உட்பட 6 பேர் பலியாகினர். இதில் தாய் மற்றும் குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் உடல்களைத் தேடி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட பகுதிக்கு பரிசலில் சென்றது, மற்றும் ஆழமான பகுதி என்ற எச்சரிக்கையையும் மீறி சென்றதால் இந்த சோகம் நேர்ந்துள்ளது.
மேலும் பரிசலில் பயணம் சென்ற போது அவர்கள் பாதுகாப்பு உடை அணியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications