தமிழகத்தில் ஒரே நாளில் 8 விவசாயிகள் மரணம் - 3 நாட்களில் 29 விவசாயிகள் பலி
தமிழகத்தில் ஒரே நாளில் 8 விவசாயிகள் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 நாட்களில் மட்டும் 29 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
தஞ்சாவூர்: பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்களும், மஞ்சள் பயிர்களும் கருகியதால் விவசாயிகள் விஷம் குடித்தும், தூக்குப் போட்டும் உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 29 விவசாயிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊருக்கே உணவு படைக்கும் உழவர்கள் வாழ்வதற்கு வழியின்றி தொடர்ச்சியாக மரணத்தை தழுவுவது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தலைகுனிவு. தமிழகத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 2500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறது புள்ளிவிபரம்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் விவசாயிகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தற்கொலைகளுக்கு கடன் சுமைதான் காரணம் என்பதே உண்மை.
கடலூர் மாவட்டம் ஆழங்காத்தான் கிராமத்தில் விவசாயி செந்தமிழன் மாரடைப்பால் உயிரிழந்தார். நாகை மாவட்டம் அறுபதாம்கட்டளையில் விவசாயி தம்புசாமி மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் புத்தகலூர் கிராமத்தில் விவசாயி வடமலை மாரடைப்பால் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பத்தில் விவசாயி மண்ணு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கழுதி அருகே வாகைகுளத்தில் விவசாயி அழகர்சாமி, பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் ஆலங்காத்தான் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் பாண்டுகுடியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் விவசாயி முருகன், நெற்பயிர் கருகியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் உயிரிழந்த விவசாயிகள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 71 விவசாயிகள் பலியாகியுள்ளனர் என்பதுதான் உச்சக்கட்ட சோகம்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications